திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7,70,000 மோசடி செய்த நபரை மும்பையில் கைது செய்த திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார்
திண்டுக்கல்லை சேர்ந்த விமலன் இவரை கடந்த 2024-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் இன்ஜினியர் வேலை வாங்கி தருவதாக காரைக்குடியை சேர்ந்த துரைஆனந்த் ரூ.7,70,000 பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி செய்த நபர் துபாயில் இருப்பது தெரிய வந்தது. @இதனை தொடர்ந்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விமான நிலையங்களில் லுக் அவுட் சுற்றறிக்கை கொடுத்தனார்
இந்நிலையில் துரைஆனந்த் சிங்கப்பூரிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் கோமதி மற்றும் காவலர்கள் மும்பை சென்று துரைஆனந்தை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.