கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்
கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 லாக இருந்த ப.ஜ.கா எம்.எல்.ஏ என்னிக்கை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல் ஏ வாக உயர்ந்து ஆட்சி அமைத்துள்ளது
கருத்துகள் (0)
Be the first to comment on this article.