புகார் செய்திகள்

தேனி திட்டச்சாலை ஸ்ரீ சடையால் முனீஸ்வரர் திருக்கோவிலில் பூஜாரி மீது கொடூரத் தாக்குதல்

குற்றவாளி மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை!

       தேனி திட்டச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சடையால் முனீஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை கோவிலில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்த ஒருவர், திருடும் நோக்கத்துடன் கோவிலுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கோவில் முன்பாக இருந்த பூஜாரி, அவரிடம் “நீ யார்?” என்று கேட்டுள்ளார்.

      இதற்கு பதிலளிக்காமல், அங்கிருந்த மரக்கம்பை எடுத்து பூஜாரியை சரமாரியாகத் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

        இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

       கோவிலில் வழிபாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த பூஜாரி மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோவில்களின் பாதுகாப்பையும், அங்கு பணியாற்றும் பூஜாரிகள் மற்றும் பக்தர்களின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியமாகும்.

        எனவே, தேனி நகர் காவல் நிலைய அதிகாரிகளை இந்து எழுச்சி முன்னணி தேனி நகர் சார்பாக மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்:

  1. கைது செய்யப்பட்ட நபரிடம் உரிய விசாரணை நடத்தி, சம்பவத்தின் முழுமையான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

      2. பூஜாரி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மை மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், கொலை முயற்சி உள்ளிட்ட பொருந்தக்கூடிய கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      3. கோவில்களில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

      4. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

     கோவில்கள் வழிபாட்டிற்கான புனிதத் தலங்கள். அங்கு பணியாற்றும் பூஜாரிகளின் பாதுகாப்பும், பக்தர்களின் நிம்மதியான வழிபாட்டு உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

     சட்டத்தை மதிக்காத சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தேனி நகர்இந்து எழுச்சி முன்னணி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர் 

 செய்தி:இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.